விஷம் குடித்து பெண் தற்கொலை

ஈரோடு, மே 10: பவானிசாகர் அடுத்துள்ள குடில்நகரை சேர்ந்தவர் பிரபு. விவசாயியான இவரது மனைவி பத்திரம்மாள்(40). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்திரம்மாள் தோட்டத்தில் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட குடும்பத்தினர் இது பற்றி கேட்ட போது, விஷம் குடித்துவிட்டதாக பத்திரம்மாள் கூறியுள்ளார். இதையடுத்து அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

கார் மோதி 3 பேர் காயம்

ஊர்க்காவல் படை ஊழியர் தூக்குமாட்டி தற்கொலை

அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு