வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது. லாலாபேட்டை பழனிச்சாமி(50), லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த குமார் (35),பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (45), ஐநூற்றுமங்கலம் பகுதியை சேர்ந்த பாரதிராஜா (42) ஆகியோர் புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை லாலாபேட்டை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்….

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு