முஸ்லிம்கள் பற்றி அவதூறு யூடியூபர் மாரிதாஸ் கைது

நெல்லை: முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாசை நெல்லை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியாகினர். இது குறித்து அவதூறு பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.  பின்னர் மற்றொரு புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நிர்வாக காரணங்களுக்காக அவர் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.  இந்நிலையில், மேலப்பாளையம் பங்களாப்பா பகுதியைச் சேர்ந்த தமுமுக உறுப்பினர் முகம்மது காதர் மீரான், யூடியூபர் மாரிதாஸ் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில்  பேசி பதிவிட்டிருந்ததாக கடந்த 4-4-2020ல் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் மேலப்பாளையம் போலீசார், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்புவது, மத மோதலை உண்டாக்குவது, ஒற்றுமையை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்ட சிறைக்கு சென்று யூடியூபர் மாரிதாசை கைது செய்தனர். அவரை நேற்று மதியம் நெல்லை ஜேஎம் 5வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி, வரும் 30ம்தேதி வரை மாரிதாசை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் மாரிதாசை நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தேனி மாவட்ட சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்….

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது