முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு சென்னையில் வாலிபர் கைது

போடி, நவ. 27: போடி சுப்புராஜ் நகர் ஜெயம் நகரில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்பவர் முருகேசன் (39). இவர் மனைவியுடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் தமிழன் (எ) இளந்தமிழன் அவரது மனைவிக்கு ஆதரவாக முருகேசனை சத்தம் போட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த அக்.16ம் தேதி இளந்தமிழன் ஒருவருடன் சேர்ந்து முருகேசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.

இதில் படுகாயமடைந்த முருகேசன் புகாரில், போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதன்பின் தனிப்படை போலீசார், தலைமறைவான தமிழனை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் அவர் இருப்பது தெரியவந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் நேற்று இளங்தமிழனை கைது செய்து போடிக்கு அழைத்து வந்தனர். அதன்பின், இளந்தமிழனை போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

காரியாபட்டி பேரூராட்சியில் இடியும் நிலையில் காலனி வீடுகள்: பராமரிக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,27,823 பேருக்கு சிகிச்சை: கலெக்டர் தகவல்