மானூர்,அக்.28:மானூர் அருகே துலுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி முத்துச்செல்வி (25). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சோமசுந்தரம் (65) என்பவர் அவரது 3 வயது ஆண் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மானூர் போலீஸ் நிலையத்தில் முத்துச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து சோமசுந்தரத்தை கைது செய்தார்.