அன்னூர்,மார்ச்27: அன்னூர் அடுத்துள்ள கரியாம்பாளையம் பகுதியில் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மழலையர் பிரிவு இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் முதல்வர் ஆண்டனி விவி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் சசி ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மழலைச் செல்வங்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மழலையர் பிரிவு இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் மாணவ,மாணவியர் தங்களது நடனத் திறமையை வெளிக்காட்டி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. பின்னர் இப்பள்ளியில் பிரிவு இறுதி ஆண்டு பயிலும் 108 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இளம் வயதிலேயே தங்களது குழந்தைகள் பட்டம் பெற்றது கண்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….