மரக்கன்று வழங்கும் விழா

திருவெறும்பூர், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருவெறும்பூரில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. உலகம் முழுவதும் நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி முன்னிலை வைத்தார்.

தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சிராஜ் நன்றி கூறினார்.

 

 

Related posts

அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி

புதுக்கோட்டையில் 10ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் தணிக்கை

கோடை வெயிலில்குறைந்த நீரை பயன்படுத்தி மாற்றுபயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறலாம்: வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்