மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு

கிருஷ்ணகிரி, ஏப்.23: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). இவர் பெங்களூருவில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் பாத்திமா(34) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், பூபதி கடந்த 20 நாட்களாக, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன், பூபதி பாத்திமாவுடன் பெங்களூருவில் இருந்து ஆண்டிமடம் செல்ல கர்நாடகா அரசு பஸ்சில் புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திற்கு பஸ் வந்தது. அப்போது பூபதி மயங்கிய நிலையிலேயே இருந்தார். இதை கண்ட பாத்திமா, அவரை எழுப்ப முயன்ற போது எழுந்திருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது, அவர் இறந்திருப்பது தெரிந்தது. இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து, அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்