மது வாங்கி கொடுப்பதில் தகராறு வாலிபர்களைதாக்கிய இருவர் ைகது

தூத்துக்குடி, ஏப். 4: தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூமாரியப்பன் (29). இவருக்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் கார்த்திக் (24) என்பவருக்கும் இடையே மது வாங்கிக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பரான மேட்டுப்பட்டியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முனீஸ்வரன்(22) என்பவருடன் சேர்ந்து பூமாரியப்பன் மற்றும் அவரது நண்பர் பழனி மகன் இசக்கிகுமார்(29) ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பூமாரியப்பன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், முனீஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது

குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால கொண்டாட்டம் இளைய தலைமுறையினரை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும்