மணமேல்குடி ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டி

புதுக்கோட்டை, ஏப்.4: புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டிகள் மணமேல்குடி வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அன்றாட வாழ்வில் ஒளியின் பயன்பாடுகள் சார்ந்த அறிவியல் சோதனைகளை செய்து காட்டினர். இப்போட்டியின் நடுவர்களாக புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜோக்கின் ராய் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகப்பிரியா மற்றும் ஜெனிட்டா ஆகியோர் செயல்பட்டனர்.

இப்போட்டியில் 9 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியினை அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா பார்வையிட்டு மாணவர்களின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார். இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார தலைமையையும் மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு