போடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

போடி, மே 6: போடியில் அரசு உதவி பெறும் ஜமீன்தாரணி காமுலமாள் மேல் நிலைப்பள்ளியில் கடந்த 2006ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாணவ மாணவியரும்ம் தங்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். மேலும் பள்ளி விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக தேவையான உபகரணங்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியனிடம் வழங்கினார். அவர்கள் தங்கள் படித்த நேரங்களில் நிகழ்ந்த சுகமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை அளித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு

சிவகாசி அருகே விதிமீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி

2 கிலோ கஞ்சா பறிமுதல்