பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 4 பேர் கைது

காங்கயம், ஏப். 18: காங்கயம், நெய்கடை வீதி பகுதியை சேர்த்தவர் ரஞ்சனிபிரியா(34). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் காங்கயம் பஸ் நிலையத்திற்கு தனது தோழி ஒருவரை அனுப்பி வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த காங்கயம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (27), ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோகுல்கார்த்திக் (22), கோவிந்தராஜ் என்கிற சுரேஷ் (27), ஊதியூர் பகுதியை சேர்ந்த வீராசாமி என்கிற கண்ணன்(24) ஆகிய 4 பேர் ரஞ்சனிப்பிரியாவிடம் வந்து தகாத முறையிலும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஞ்சனிப்பிரியா இதுகுறித்து நேற்று காலை காங்கயம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காங்கயம் போலீசார் நந்தகுமார், கோகுல்கார்த்திக், கோவிந்தராஜ் என்கிற சுரேஷ், வீராசாமி என்கிற கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்