பெட்ரோல் பங்கில் தகராறு

 

தேவதானப்பட்டி, ஜூன் 11: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன்(23). இவரும், அவரது உறவினரான பாலயோகியும் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு டூவீலரில் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த பாலாஜி, சுபாஸ், முத்துப்பாண்டி ஆகியோர் ராஜேஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் கீழே கிடந்த பீர்பாட்டிலை எடுத்து உடைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ராஜேஸ்வரன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் பாலாஜி, சுபாஸ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்