பல்லடத்தில் 51 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

பல்லடம், ஆக. 3: பல்லடத்தில் இந்து முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடுகபாளையம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் டி.கே.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் பொன்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் பல்லடம் நகர நிர்வாகிகள் விஷ்னு, சுரேஷ், பிரசாத், கோபால், ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் சுபாஷ், பொங்கலூர் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்லடம் நகரம், ஒன்றிய பகுதியில் 51 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது, பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். பல்லடம், பொங்கலூர் பகுதி குடிநீர் பற்றாக்குறையை போக்க இரண்டாவது அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்