நெல் மூட்டைகளில் கூடுதல் எடை கொள்முதல் நிலைய ஊழியர்கள் சஸ்பெண்ட்

தஞ்சாவூர்: நெல் மூட்டைகளில் கூடுதல் எடை இருந்ததால் கொள்முதல் நிலைய பணியாளர்கள் 2 பேரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் நடப்பு சம்பா பருவத்தில் 504 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4ம் தேதி வரை 1,71,973 மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் புகாரினை பதிவு செய்யும் வகையில் புகார் பெட்டிகளும், அத்துடன் அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் குறிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்18005993540-ஐ தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் நிலையங்கள் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது