திருப்பூர், ஜூலை. 4: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கங்கள் சார்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்குகிறார். எனவே இதில் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.