துறையூர் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

துறையூர்: துறையூர் அருகே அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பணம், வெள்ளி நகை ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துறையூர் அருகே வேங்கடத்தனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (41). இவர் (21ம் தேதி) இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் உள்ள காட்டு கொட்டகையில் தங்கினார். மறுநாள் காலை பக்கத்து வீட்டில் வசிப்போர், பரமேஸ்வரியின் வீடு திறந்து கிடப்பதாக தகவல் தந்தனர். பரமேஸ்வரி சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 100 கிராம் எடையுள்ள பிரேஸ்லெட் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.மேலும் அதே தெருவில் வசிக்கும் ஆர்த்தி (45), தனது வீட்டினை பூட்டிவிட்டு, தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ.7,500 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பரமேஸ்வரி, ஆர்த்தி இருவரும் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது