திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

 

திருவெறும்பூர், பிப்.10: திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்குமலை நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவரது மகள் இலக்கியா (19). இவர் காட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கல்லூரியில் விசாரித்ததில் மாணவி அன்று கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறினர்.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் இலக்கியா கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை சுரேஷ் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்