திருவெறும்பூர் அருகே ஓவிய கலைஞர் தற்கொலை

 

திருவெறும்பூர், ஜூன் 7: திருவெறும்பூர் அருகே ஓவிய கலைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி 22வது தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் தவச்செல்வன் (52 ). ஓவிய கலைஞரான இவருக்கு குடிப்பழக்கமும், கடன் பிரச்னையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த தவச்செல்வன் கடந்த 3ம் தேதி தனது வீட்டின் பூஜை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்

வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி