திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்கம்

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 17: திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்று எம்எல்ஏ மாரிமுத்து அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக புதிய பஸ் துவக்க விழா புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ மாரிமுத்து , நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன், கும்பகோணம் போக்குவரத்து கழக நாகை மண்டல மேலாளர் ஸ்டாலின், கிளை மேலாளர் ஜெய்சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த பஸ் தினமும் இரவு 8.00 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி, கும்பகோணம் வழியாக சென்னை கிளம்பாக்கம் பஸ் நிலையம் சென்றடையும்.

 

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்