திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் பறக்க முயன்றவர் கைது

 

திருச்சி, மார்ச் 22: திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் பறக்க முயன்றவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் தாண்டவராயன் சோழகன்பேட்டையை சேர்ந்தவர் குட்டி ஆண்டிசாமி (39). இவர் மயிலாடுதுறை கொடுவையை அடுத்த திருமுல்லை வாசல் முத்துக்குமார் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.

இதன் மூலம் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை பரிசோதித்த இமிக்ரேஷன் அதிகாரிகள், பாஸ்போர்ட் போலியானது என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து குட்டி ஆண்டிசாமியை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் குட்டி ஆண்டிசாமி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்