திக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகர்கோவில், செப்.21 : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 வது பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார். திராவிடர் கழக காப்பாளர் பிரான்சிஸ், திக மாவட்ட துணைச் செயலாளர் ஐசக் நியூட்டன், ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம், குமாரதாஸ், மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமாரதாஸ், திக மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜேஸ், அமைப்பாளர் தமிழ்மதி, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் யுவான்ஸ், பொறுப்பாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்