சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மின் பகிர்மான கோட்ட அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். எரிசக்தி துறை சார்பில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 10 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. …