டூவீலர் தீப்பற்றி எரிந்து நாசம்

 

வடமதுரை, ஜூன் 6: வடமதுரை அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தும்மலக்குண்டு பிரிவில் சாலையோரம் நேற்று காலை டூவீலர் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் வடமதுரை ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் வடமதுரை அருகிலுள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த செல்வத்தின் டூவீலர் என்பதும், நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்த போது தீப்பிடித்ததும், சாலையோரத்தில் டூவீலரை நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டு அப்படியே வீட்டிற்கு சென்று விட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார், டூவீலர் தீப்பற்றி எரிந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி