சென்னைக்காரர் மூச்சு திணறி பலி

 

திண்டுக்கல், ஜூன் 7: திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை சேர்ந்தவர் ராம் பிரபாகர் (50). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த ரகுராம் என்பவருடன் தனியார் கண் மருத்துமனைக்கு செல்வதற்காக திண்டுக்கல்லுக்கு காரில் வந்துள்ளார். இருவரும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது ராம் பிரபாகருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஐ சித்திக் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு