சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

சாயல்குடி, மே 4:ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதனை போன்று அருகில் உள்ள எம்.கரிசல்குளம், பிள்ளையார்குளம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான் மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வர்த்தக நகராக உள்ளது.

மேலும் சாயல்குடி பஜார் வழியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் நாகப்பட்டினம் கிழக்கு கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குகிறது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையோரம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சிலர் ஆக்கிரமித்து இருந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் வைத்திருந்த விளம்பர பதாகைகள், முகப்பு பகுதிகளை கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் முன்னிலையிலும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும் சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் அருப்புக்கோட்டை சாலை ராமேஸ்வரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் சங்கத்தினர் கால அவகாசம் கேட்டதால், மீதமுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் வரும் மே 8ம் தேதி அகற்றப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை