சாம்பவர்வடகரையில் ராமசுவாமி கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சுரண்டை,ஜூன் 3: சுரண்டை அருகே ராமசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ராமசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24ம் தேதி திருக்கொடி ஏற்றுதல் மற்றும் திருத்தேர் கால் நாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டியார் திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு 21 வகையான அபிஷேகம், வெள்ளி கவசம் சாத்தி அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து தேரை இழுத்தனர். இதில் சாம்பவர்வடகரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்

ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், காவலர் கைது

மின்தடையை கண்டித்து சாலை மறியல்