கொலை மிரட்டல் விடுத்த முதியவர் மீது வழக்கு

போடி, மே 19: போடி இபி ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் அமரன் மகன் பிரேம்சந்தர் (35).போடி கீழத்தெருவை சேர்ந்த அமர்நாத் (70). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று வடக்கு மலை பகுதி முட்டுக்கோப்பை செல்லும் சாலையில் பிரேம்சந்தர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த அமர்நாத், பிரேம்சந்தரை தடுத்து நிறுத்தி சராமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரேம்சந்தர் புகாரில், போடி குரங்கணி போலீசார் முதியவர் அமர்நாத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்