போடி, மே 19: போடி இபி ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் அமரன் மகன் பிரேம்சந்தர் (35).போடி கீழத்தெருவை சேர்ந்த அமர்நாத் (70). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று வடக்கு மலை பகுதி முட்டுக்கோப்பை செல்லும் சாலையில் பிரேம்சந்தர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த அமர்நாத், பிரேம்சந்தரை தடுத்து நிறுத்தி சராமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரேம்சந்தர் புகாரில், போடி குரங்கணி போலீசார் முதியவர் அமர்நாத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.