குழந்தை இல்லாததால் பிறப்புறுப்பை அறுத்தெறிந்த டிரைவர் குடியாத்தம் அருகே பரபரப்பு

குடியாத்தம்: குடியாத்தம் அருேக குழந்தை இல்லாத விரக்தியில், டிரைவர் தனது பிறப்புறுப்பை அறுத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(33), டிரைவர். இவருக்கும், ஆந்திர மாநில சேர்ந்த அனிதா(30) என்பவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக இருவரும் பல இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்றும் பயனில்லையாம். இதனால், சந்தோஷ்குமார் குடிபோதைக்கு அடிமை ஆகியுள்ளார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை சந்தோஷ்குமார் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று, திடீரென தனது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத விரக்தியில் பிறப்புறுப்பை அறுத்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது….

Related posts

மழையால் வீட்டின் தூண் இடிந்து விழுந்து சிறுமி பலி குடியாத்தம் அருகே சோகம் விளையாடிக் கொண்டிருந்தபோது

25 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது குடியாத்தம் ரயில் நிலையத்தில்

திருவிழா கூட்ட நெரிசலில் பெண் மீது விழுந்து சில்மிஷம் 4 பேர் அதிரடி கைது கே.வி.குப்பம் அருகே