குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது

 

குளித்தலை, மார்ச் 29: குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை சின்னாண்டார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் தருண் (20). இவர் அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவருக்கும் பாரதி நகரை சேர்ந்த வசந்த், சஞ்சய், கரண் ஆகிய 3 பேருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக் கொண்டு கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் தெப்பக்குளம் அருகே யோகா சென்டர் எதிரே நின்று கொண்டிருந்த தருணை தகாத வார்த்தையால் திட்டி கட்டை மற்றும் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த தருண் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து தருண் தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் பாரதி நகர் பகுதியை சேர்ந்த வசந்த், சஞ்சய், கரன் ஆகிய மூன்று பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து சஞ்சய் என்பவரை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது