கிடாரக்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

நெல்லை, பிப்.25: ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி இருந்து ₹6 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து கிடாரக்குளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். விழாவில் கிடாரகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ஆண்டி உட்பட ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது