காரில் 50 கிலோ குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது

 

திருப்பூர், ஜூன் 7: திருப்பூர் ஆண்டிபாளையம் பிரிவில் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம், எஸ்.ஐ. அழகு ராஜா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்கலத்தில் இருந்து திருப்பூர் வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். காரில் சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் காரில் வந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டை பகுதி சேர்ந்த சரவணன் (34) மற்றும் வீரய்யன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது, இருவரும் திருப்பூர் அவினாசி சாலை அம்மாபாளையம் பகுதியில் தங்கி அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதாகவும், இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து திருப்பூர் பகுதி முழுவதும் சில்லரையில் விற்பனை செய்ததும் விசாரணை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு