கலந்தாய்வில் மட்டுமே பணிமாறுதல்

 

திருவாரூர், மே 22: தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் கலையரசன் பொருளாளர் விஜய் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் செல்வன், செயலாளர் கோபி நாராயணன், பொருளாளர் சத்தியமூர்த்திமற்றும் பொறுப்பாளர்கள்கலந்து கொண்டனர்.

இதில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வலங்கைமான் தாலுக்காவில் கூடுதலான அளவில் ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருவதால் இவர்களை பிற தாலுகாவிற்கு பணியிட மாறுதல் செய்திட வேண்டும், மேலும் மாதம் ரூ14 ஆயிரம் என்ற அளவில் குறைவான ஊதியம் பெற்று வருவதால் ஆய்வாளர்களை அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணி புரியும் வகையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும், மேலும் துணை இயக்குனராக பொறுப்பு வகித்து வரும் பாலசுப்ரமணியன் தொடர்ந்து ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதுடன் ஊழியர்களை ஒருமையிலும் பேசி வருகிறார். எனவே அவரை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 24k; தேதி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி