கரூர், ஜூன் 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் எம்ஜிஆர் நகர், வெங்கடேஷ்வரா நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் இடையே எம்ஜிஆர் நகர், வெங்கடேஷ்வரா நகர் போன்ற பல்வேறு நகர்ப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளை சுற்றிலும் நுற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிச் சாலைகளில் அதிகளவு வாகன போக்கவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தெருக்களில் உள்ள சாலைகள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக நடக்க கூட முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, பகுதிகளில் உள்ள சாலைகளை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.