கரூரில் பள்ளி முன் நிற்கும் வாகனங்கள் இடம் மாற்ற மாணவர்கள் எதிர்பார்ப்பு

கரூர், மார்ச் 28: கரூரில் அரசு பள்ளிமுன் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் ஜவகர் பஜார் தாலுகா ஆபீசுக்கு முன் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி அருகே வாகனங்கள் மற்றும் பார்சல் வாகனங்களை நினைத்த நேரங்களில் எல்லாம் டிரைவர்கள் வாகனத்தைக் கொண்டு வந்து பள்ளிக்கு முன் நிறுத்துவதால் மாணவர்களுக்கு பள்ளிக்கு உள்ளே சென்று வருவதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.

சில நேரங்களில் மாணவர்கள் சைக்கிள்களை பள்ளி உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் மாணவர்கள் வாகனத்தில் மோதி கீழே விழுகின்றனர்.போக்குவரத்து போலீசார் அனுமதி இல்லாத நேரத்தில் உள்ளே வரும் வாகனங்களுக்கு தகுந்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்