கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

திருச்சி, ஜூன் 10: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருச்சி சிந்தாமணி பஜாரில் கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று தகவலின்பேரில் போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிந்தாமணி காந்திநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (23) என்ற வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு