நெல்லை,மே4: வீரவநல்லூர் எஸ்ஐ காவுராஜன் மற்றும் போலீசார் உப்பாத்து காலனி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கந்தன் என்ற கந்தசாமி (36) என்பவர் தனது பைக்கில் 25 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.