எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா

குமாரபாளையம், மார்ச் 28: குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியில், 17வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன் மற்றும் துணைத் தலைவர் மதன் கார்த்திக் தலைமை தாங்கினர். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர், எக்ஸல் பொறியியல் கல்லூரி முதல்வர் பொம்மண்ண ராஜா முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக ரோட்டரி சர்வதேச இயக்குனர், நிர்வாக இயக்குனர் பாப்புலர் பவுண்டேஷன்ஸ் லிமிடெட் சென்னை வெங்கடேஷ் அனந்த நாராயணன், நடிகை அபர்ணா தாஸ் பேசினர். நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நான்-சர்கியூட் கிளைகளின் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எக்ஸல் பொறியியல் கல்லூரி இயக்குனர் அன்பு கருப்புசாமி நன்றி கூறினார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை