உள்ளங்காலில் ‘லாடம் கட்டி’ சித்ரவதை தலித் சிறுமியை போலீஸ் பாணியில் தாக்கிய கும்பல்

அமேதி: உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒரு கும்பல் அடித்து சித்ரவதை செய்த வீடியோ, வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டம், ராய்ப்பூர் புல்வாரி பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமி மீது திருட்டு பழி சுமத்திய கும்பல், அதை ஒப்புக் கொள்ளும்படி அடித்து சித்ரவதை செய்துள்ளது. 2 ஆண்கள் சிறுமியை தரையோடு அழுத்திப் பிடிக்க, ஒருவர் சிறுமியின் காலில் தடியால் ஆக்ரோஷமாக அடிக்கிறார். இதனால், சிறுமி வலியால் துடித்து கதறுகிறார். அவரை சுற்றி நிற்கும் 3 பெண்கள், சிறுமியிடம் கேள்விகள் கேட்கின்றனர்.ஒருகட்டத்தில் சிறுமியை தடியால் தாக்கிய நபர், தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘மனிதாபிமானமற்ற இந்த கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸ் தீவிரமான போராட்டத்தின் மூலமாக தூங்கிக் கொண்டு இருக்கும் உங்களை எழுப்ப வேண்டியிருக்கும்,’ என்று கூறியுள்ளார்….

Related posts

திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!!

சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!