இந்தியா இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 1.27 லட்சம் பேர் பாதிப்பு; 2,795 பேர் உயிரிழப்பு, 2,55,287பேர் டிஸ்சார்ஜ் kannappanJune 1, 2021, 9:32 am021 views டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,795 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 1,27,510 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,81,75,044 ஆக உயர்ந்தது. * புதிதாக 2,795 பேர் உயிரிழந்துள்ளனர். * இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,31,895 ஆக உயர்ந்துள்ளது. * தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,55,287 பேர் குணமடைந்துள்ளனர். * இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,59,47,629 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,95,520 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * இதன் மூலம், நாட்டின் இதுவரை 21,60,46,638 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …