அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு ஏலம்

தர்மபுரி, ஜூன் 4: குமாரசாமிபேட்டையில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டையில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோயில்களுக்குச் சொந்தமாக, தர்மபுரி டவுன் நேதாஜி பைபாஸ் ரோடு பகுதியில் 4,563 சதுரடி மற்றும் 5123 சதுரடி என 2 காலிமனை பகுதிகள் உள்ளன. இந்த நிலங்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த 5 ஆண்டு கால வாடகைக்கு விடப்படவுள்ளது. இதன் பொது ஏலம் மற்றும் டெண்டர் திறப்பு, வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு கோயிலுக்குச் சொந்தமான வள்ளலார் திடல் அலுவலகத்தில், தர்மபுரி பிரிவு ஆய்வாளர் முன்னிலையில் நடைபெறும். டெண்டர் மற்றும் பொது ஏல நிபந்தனைகள், இதர விபரங்களை கோயில் அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது

முதியவர் மயங்கி விழுந்து சாவு

தோவாளை அருகே நான்குவழிச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் தடுப்புகள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட கோரிக்கை