அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

லால்குடி, ஜூன் 2: திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி ப்ரம்மோத்ஸவ விழா தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் தினமும் வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று 1ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இன்று (2ஆம் தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து நடைபெறும் சாமி வீதி உலாவில் அன்பில் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்

பெண்களை அவதூறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்