அன்னவாசல் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

 

விராலிமலை, மார்ச் 2: அன்னவாசல் அருகே மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மருமகள் தனது 2 குழந்தைகளுடன் மாயமாகியுள்ளார் இதையடுத்து மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை மீட்டுத் தருமாறு மாமியார் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அன்னவாசல் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாகமுத்து. இவருக்கும் தமிழரசி(25) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் நிஷாந்த் என்ற மகனும், மூன்று வயதில் மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தமிழரசிக்கும் அவரது மாமியார் காந்திக்கும்(60) கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதில் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்த தமிழரசி கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி உள்ளனர். இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் தமிழரசி மற்றும் பேரக்குழந்தைகள் கிடைக்காத நிலையில் மாயமான 3 பேரையும் கண்டுபிடித்து தருமாறு காந்தி அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்