பைக் தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் உடல் கருகி பலி

திருவொற்றியூர்: மணலி, ஆண்டார்குப்பம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (28), தனியார் நிறுனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை, மணலி விரைவு சாலை, எம்.எப்.எல்., சந்திப்பு அருகே மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வந்த சரக்கு வேன் இவரது மோட்டார் பைக் மீது மோதியதால் நிலை குலைந்து மற்றொரு வேன் மீது பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து பெட்ரோல் கசியவே, குபீரென தீப்பற்றி எரிந்தது.

இதில் பைக்கில் இருந்த சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த, சி.பி.சி.எல். நிறுவன தீயணைப்பு வாகன வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியானவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், வேன் டிரைவரான, கொருக்குப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (48) என்பவரை கைது செய்தனர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்