இதில் பைக்கில் இருந்த சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த, சி.பி.சி.எல். நிறுவன தீயணைப்பு வாகன வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியானவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், வேன் டிரைவரான, கொருக்குப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (48) என்பவரை கைது செய்தனர்.