குறிப்பாக, 22.10.2023 முதல் 26.11.2023 வரை 141 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 139 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவ குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது, என தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.