மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கலூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கான கல்லூரி வளாக நேர்முக தேர்வு நடந்தது. இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவ – மாணவிகள் 120 பேருக்கு, பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மூலம் சமீபத்தில் நடத்தப்பட்ட நேர் காணல் வாயிலாக கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வர் சாய் கிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் நிர்வாக அலுவலர் சத்தியபாமா, துறை தலைவர்கள் சரவணன், ரவி, ருத்திரக்கோட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்