இதுதவிர, வேறு சில நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வரும் 18ம் தேதி சென்னை திரும்புகிறார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் தேசிய கீதம் வாசிக்கும் முன்னரே வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட கூடும் என்பதால் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஊட்டி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.