திருத்தணி: திருத்தணி அடுத்த வீரகநல்லூர் அருகே உள்ள பகத்சிங் நகரில் சுமார் 25 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தணி ஸ்ரீகிரண் பவுண்டேஷன் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பீகாக் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஸ்ரீகிரண் 25 மலைவாழ் குடும்பங்களுக்கு இலவச புடவை, வேட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கு துணிமணிகள் வழங்கி கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.