இதற்கான ஏற்பாடுகளை தேர்வு துறையினர் செய்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வரை செல்லும் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையையொட்டி அய்யம்பேட்டை, ஏக்கனாம்பேட்டை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த சாலை வழியாக செல்லும் கனரக லாரிகள் மட்டுமின்றி, தனியார் பேருந்துகள் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிப்பான்களை வைத்து செல்கின்றன.
சாலை விரிவாக்கத்தின்போது பள்ளி உள்ள பகுதி ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என பதாகைகள் இருந்ததை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி இருப்பதை தெரியாமல் இந்த வழியாக செல்லும் லாரிகள், தனியார் பேருந்துகள் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புவதால் தேர்வு வளாகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் சிரமப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்றநிலையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அதிக சத்தம் எழுப்பும் லாரிகள், பேருந்துகள் மீது வழக்குப்பதிவு செய்து, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.