ஜெயங்கொண்டத்தில் ரூ.91 லட்சத்தில் கிளை நூலகம்அமைக்க அளவீடு பணி

 

ஜெயங்கொண்டம், டிச.31: ஜெயங்கொண்டத்தில் ரூ91 லட்சம் மதிப்பீட்டில் கிளை நிர்வாகம் அமைப்பதற்கான அளவீடு பணி நேற்று தொடங்கியது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் பல ஆண்டுகளாக ஜெயங்கொண்டம் கிளை நூலகம் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. சொந்தமாக கட்டிடம் இல்லாமல் அதிக அளவில் வாடகை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகள் நூலகத்திற்கான இடங்களை அவ்வப்போது தேர்வு செய்தும் வருகின்றனர். தற்போது கிளை நூலகத்திற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு அதற்கான அனுமதி கடந்த 27ம் தேதி கிடைக்கப்பெற்றது. ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் நூலகம் கட்டிடம் கட்டுவதற்கான அளவீடு பணிகளை நேற்று அரியலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருவருள், உதவி செயற்பொறியாளர் அன்பரசி, உதவி பொறியாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் செய்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்